GK: மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிக புத்திசாலி 'விலங்கு' எது தெரியுமா..? 99% பேருக்கு தெரியாது.. பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க!
- Published by:Soundarya Kannan
- news18-tamil
Last Updated:
நம்ப முடியாது ஆனால் இதுதான் உண்மை. மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் 94% டிஎன்ஏ ஒத்துப்போகிறது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.
எந்த மிருகம் புத்திசாலி என்று கேட்டால் பலரும் நரி என்றே சொல்வார்கள். ஆனால் விஞ்ஞானிகளின் பார்வையில் நரி அவ்வளவு அறிவாளி மிருகம் கிடையாது. கேள்வி என்னவென்றால், மனிதர்களுக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது? என்றுதான். இதை கேட்டால் உங்களால் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் 94% டிஎன்ஏ ஒத்துப்போகிறது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.
advertisement
advertisement
மனிதர்களுக்குப் பிறகு, அசாதாரண நுண்ணறிவுக்கு மிகவும் பிரபலமான விலங்கு டால்பின் ஆகும். குறிப்பாக பாட்டில்நோஸ் டால்பின்கள் சமூக கட்டமைப்புகளை உருவாக்கி, தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தீர்க்கும். டால்பின்களின் நுண்ணறிவின் ஒரு சுவாரசியமான அம்சம் கருவிகளைப் பயன்படுத்துவது. இந்த திறன்கள் தற்காப்புக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. கற்பித்தல் மூலம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு செல்கிறது.
advertisement
advertisement
நில விலங்குகளில் யானை மிக புத்திசாலியான மிருகம். அவற்றில் சுமார் 257 பில்லியன் நியூரான்கள் உள்ளன. இது மனித மூளையை விட மூன்று மடங்கு அதிகம். யானைகளின் நுண்ணறிவின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், துணை இறந்துவிட்டதால் அது துக்கத்தை வெளிப்படுத்தும் திறன் ஆகும். மேலும், யானைக்கு அரவணைத்து ஆறுதல் கூறும் திறனும் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பாதகமான சூழலில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப யானைகள் மாற முயற்சிக்கிறது.
advertisement






