வேட்பாளர்கள் தேர்வில் தொடர் இழுபறி.. மாணிக்கம் தாகூர் ராஜினாமா முடிவு.. கார்கேவுக்கு கடிதம்!
- Published by:Arivazhagan T
- news18-tamil
Last Updated:
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.
advertisement
அதன்படி, பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் மேலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
advertisement
advertisement
advertisement
advertisement
தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் சூழலில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.








