advertisement

சென்னை மெரினாவில் பைக் சாகசம் செய்த இளைஞர் உயிரிழப்பு!

Last Updated:

ஆபத்தான முறையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுவது மற்றும் வீலிங் செய்வது என ஏராளமான இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேசில் ஈடுபடுவதற்காக ஏராளமான இளைஞர்க்ள நள்ளிரவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதையும் மீறி இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரையில் இரவில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டனர். சாலையிலன் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்
அப்போது அங்கு வந்த ஏராளமான இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். ஆனாலும், சில இளைஞர்கள் போலீஸ் கெடுபிடியையும் மீறி பைக் ரேசில் ஈடுபட்டனர்
இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டதால் காமராஜர் சாலை, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை போன்ற பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. ஆபத்தான முறையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுவது மற்றும் வீலிங் செய்வது என ஏராளமான இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டனர்.
advertisement
அப்போது, வேகமாக சென்ற பைக் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபத்தான முறையில் பைக்ரேசில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதால் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டாலும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இது போன்ற ரேஸ்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்மார்மிங் ஆபரேசன் என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
advertisement
மேலும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபாரதம் விதிக்கப்பட்டதோடு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டன. இதனால் செயின் பறிப்பு, பைக் ரேசிங் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தன.
மேலும், ஸ்டார்மிங் ஆபரேசன் வாகன சோதனையால் இரண்டாயிரத்து 750 ரவுகள் கைது செய்யப்பட்டனர். இதே போல் கடுமையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டிக்டாக் மூலம் பிரபலமான 9 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தப்பட்டு கொலை!
view comments
தமிழ் செய்திகள்/ செய்திகள்/தமிழ்நாடு/
சென்னை மெரினாவில் பைக் சாகசம் செய்த இளைஞர் உயிரிழப்பு!
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement