advertisement

வட்டியின்றி ரூ.5 லட்சம் வரை கடன்... பெண்களுக்கு மத்திய அரசின் கடனுதவி!

Last Updated:

டிசம்பர் 2023-ல் வெளியிடப்பட்ட தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) தரவுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பெண் உறுப்பினர்களைக் கொண்ட 90 லட்சம் சுய உதவிக் குழுக்கள் இருப்பதாக டவுன் டு எர்த் அறிக்கை கூறுகிறது.

News18
News18
பிரதமர் மோடி அரசின் லக்பதி திதி யோஜனா என்பது பெண்களுக்கு வட்டியின்றி கடன் வழங்கப்படும் திட்டமாகும். முற்றிலும் வட்டி இல்லாத இந்தக் கடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். அரசாங்கம் பெண்களிடையே பொருளாதார வலுவூட்டல் மற்றும் நிதி சுதந்திரத்தை உருவாக்கி நிறுவ முயற்சிக்கும் திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலனைப் பெற ஒரே ஒரு நிபந்தனை உள்ளது, அதாவது சுய உதவிக் குழுவில் (SHG) உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்தக் கடன் கிடைக்கும்.
கடந்த ஆண்டு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை 2 கோடியாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த எண்ணிக்கையை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். பெண் அல்லது குடும்பத்தின் மொத்த வருவாயை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதற்கு லக்பதி திதி யோஜனா என்று பெயரிடப்பட்டது.
சுய உதவிக் குழுக்கள் என்றால் என்ன?
முக்கியமாக கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைக் கொண்ட சிறு குழுக்கள், பணத்தைச் சேமிக்கவும், ஒருவருக்கொருவர் கடன் வழங்கவும் ஒன்று கூடுகின்றன. டிசம்பர் 2023-ல் வெளியிடப்பட்ட தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) தரவுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பெண் உறுப்பினர்களைக் கொண்ட 90 லட்சம் சுய உதவிக் குழுக்கள் இருப்பதாக டவுன் டு எர்த் அறிக்கை கூறுகிறது. இது 1970களில் சில கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டது.
advertisement
Also Read | ஏர் ஹோஸ்டஸ் சம்பளம்: விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?
லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் என்பது குறைந்தபட்சம் நான்கு விவசாய பருவங்கள் அல்லது வணிக சுழற்சிகளுக்கு கணக்கிடப்படுகிறது. மேலும், சராசரி மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருப்பவர்களுக்கு, வருமானத்தின் நிலைத்தன்மை காரணமாக இந்தக் கணக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசின் ஊரக அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. வணிகப் பயிற்சி அளிப்பது, பொருட்களை சந்தைக்கு வழங்குவது, தேவையான திறன்கள் மற்றும் பயிற்சி அளிப்பது என அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் சாத்தியப்படுத்தப்படுகிறது. இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் இந்த முகவரியில் உள்நுழையலாம்- https://lakhpatididi.gov.in/ கோழி வளர்ப்பு, எல்இடி பல்பு உற்பத்தி, விவசாயம், காளான் வளர்ப்பு, ஸ்ட்ராபெர்ரி சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கைவினை வேலை, ஆடு வளர்ப்பு என அனைத்திற்கும் கடனைப் பெறலாம்.
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், மத்திய பட்ஜெட் 2026, தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/வணிகம்/
வட்டியின்றி ரூ.5 லட்சம் வரை கடன்... பெண்களுக்கு மத்திய அரசின் கடனுதவி!
Next Article
மனைவி, மகள் கழுத்தறுத்துப் படுகொலை... தப்பியோடிய கணவனுக்கு வலைவீச்சு... அக்கம்பக்கத்தினர் அளித்த பகீர் விளக்கம்...
மனைவி, மகள் கழுத்தறுத்துப் படுகொலை... தப்பியோடிய கணவனுக்கு வலைவீச்சு... அக்கம்பக்கத்தினர் அளித்த பகீர் விளக்கம்...
  • சென்னையில் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்த நபர் தப்பியோட்டம்

  • சீனிவாசன் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்

  • கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைப்பு

தாக்கக் குறும்படங்கள்
advertisement