advertisement

திருப்பரங்குன்றம் மலையில் கோயில் எங்கே உள்ளது...? தர்கா எங்கே உள்ளது...? தீபத்தூண் சர்ச்சை ஏன் எழுந்தது?

Last Updated:
மதுரையில் அசாதாரண சூழலை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் மலையில், கோயில் எங்கே உள்ளது? தர்கா எங்கே உள்ளது? தீபத்தூண் சர்ச்சை ஏன் எழுந்தது? ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
1/8
 முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், குடைவரை அமைப்பில் உருவாக்கப்பட்டது. அதில், முருகனின் கருவறை உள்ள இடத்தில் இருந்து நேராக மலையின் மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இங்குதான், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றப்படுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், குடைவரை அமைப்பில் உருவாக்கப்பட்டது. அதில், முருகனின் கருவறை உள்ள இடத்தில் இருந்து நேராக மலையின் மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இங்குதான், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றப்படுகிறது.
advertisement
2/8
 இது ஒருபுறம் இருக்க, மலையின் மேலே காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்கா ஒன்றும் அமைந்துள்ளது. இதில், நெல்லித்தோப்பு என்ற பகுதி, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள், மலை உச்சியில் உள்ள தர்கா, கொடிக்கம்பம் இவை அனைத்தும் தர்காவிற்கு சொந்தமானது.
இது ஒருபுறம் இருக்க, மலையின் மேலே காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்கா ஒன்றும் அமைந்துள்ளது. இதில், நெல்லித்தோப்பு என்ற பகுதி, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள், மலை உச்சியில் உள்ள தர்கா, கொடிக்கம்பம் இவை அனைத்தும் தர்காவிற்கு சொந்தமானது.
advertisement
3/8
 இதுமட்டுமின்றி, மீதமுள்ள மலைப் பகுதிகள் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கு உரியது என 300-க்கும் மேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்து 21 சாட்சிகளை விசாரித்து சுமார் 15 வழக்குகளில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதுமட்டுமின்றி, மீதமுள்ள மலைப் பகுதிகள் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கு உரியது என 300-க்கும் மேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்து 21 சாட்சிகளை விசாரித்து சுமார் 15 வழக்குகளில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
advertisement
4/8
 மேலும், மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் இருந்து நெல்லித்தோப்பு வரை உள்ள மலைப்பாதை இரண்டு தரப்புக்கும் பொதுவானது. நெல்லித்தோப்பில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல ஒரு பாதையும், சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல தனிப் பாதையும் பிரிகின்றன.
மேலும், மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் இருந்து நெல்லித்தோப்பு வரை உள்ள மலைப்பாதை இரண்டு தரப்புக்கும் பொதுவானது. நெல்லித்தோப்பில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல ஒரு பாதையும், சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல தனிப் பாதையும் பிரிகின்றன.
advertisement
5/8
 இந்நிலையில், இந்துத்துவா அமைப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என உரிமை கோரும் தீபத்தூண், தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் தீபம் ஏற்றுவதற்கு, தர்காவிற்கு செல்லும் பாதையைத்தான் பயன்படுத்த முடியும். அது தீபத்தூண் என்பதற்கு இதுவரை எந்த சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்துத்துவா அமைப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என உரிமை கோரும் தீபத்தூண், தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் தீபம் ஏற்றுவதற்கு, தர்காவிற்கு செல்லும் பாதையைத்தான் பயன்படுத்த முடியும். அது தீபத்தூண் என்பதற்கு இதுவரை எந்த சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
advertisement
6/8
 இந்தத் தூணில் 1862 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளில் வெளிநபர் சிலர் விளக்கேற்ற முயற்சித்ததாகவும், அப்போதைய ஆட்சியாளர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், 1923ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தூணில் 1862 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளில் வெளிநபர் சிலர் விளக்கேற்ற முயற்சித்ததாகவும், அப்போதைய ஆட்சியாளர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், 1923ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
advertisement
7/8
 கோயில் நிர்வாக நடைமுறைப்படியும், மரபின் அடிப்படையிலும் கருவறைக்கு மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தூணில்தான் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
கோயில் நிர்வாக நடைமுறைப்படியும், மரபின் அடிப்படையிலும் கருவறைக்கு மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தூணில்தான் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
advertisement
8/8
 ஆனால், வழக்கத்திற்கு மாறாக, தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் பக்கத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இந்துத்துவா அமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக, தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் பக்கத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இந்துத்துவா அமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
advertisement
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement