நல்ல உணவுகள் கூட உங்கள் வயிற்றைக் கெடுக்கும்.. சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க..!
- Published by:Sivaranjani E
- news18-tamil
Last Updated:
நம்மிடையே மிகவும் சத்தான பல உணவுகள் உள்ளன. ஆனால் அனைவரின் உடலுக்கும் இந்த உணவுகள் சரியாக இருக்குமா என்று சொல்ல முடியாது. இந்த உணவை ஒருவர் சாப்பிட்டால், வாயு, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எதுவும் உருவாக்கப்படுவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல், ஒவ்வொரு நபருக்கும் ஒரேப்போன்ற டயட் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. நம்மிடையே மிகவும் சத்தான பல உணவுகள் உள்ளன. ஆனால் அனைவரின் உடலுக்கும் இந்த உணவுகள் சரியாக இருக்குமா என்று சொல்ல முடியாது. இந்த உணவை ஒருவர் சாப்பிட்டால், வாயு, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் எந்தெந்த உணவுகளால் இதுபோன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்...
advertisement
பால் பொருட்கள் : பால் கூட ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் புதுதில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையின் இரைப்பைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், நம் நாட்டில் 70 சதவீத மக்களுக்கு லாக்டோஸ் பிரச்சனை உள்ளது. அதாவது, பாலில் உள்ள லாக்டோஸை மக்களின் குடலால் ஜீரணித்துக்கொள்ள முடியாது. எனவே பால் குடித்தவுடன் வயிறு உப்புசம், வாயு போன்ற பிரச்சனை ஏற்படும். ஆகவே இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக பகலில் பால் குடிக்காமல் இருப்பது நல்லது.
advertisement
பருப்பு : பருப்பு வகைகள் புரதத்தின் களஞ்சியமாகும். இதில் போதுமான அளவு புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதுக்கள் போன்றவை உள்ளன. ஆனால் பலவீனமான குடல் உள்ளவர்கள் பருப்பு வகைகளை சாப்பிட்ட பிறகு அதிக வாயு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஒரு ஆரோக்கியமான நபர் பருப்பு வகைகளை அதிகமாக சாப்பிட்டால், அது வாயு பிரச்சனையை அதிகரிக்கிறது. ஏனெனில் பருப்புகளில் உள்ள கூறுகள் குடலில் உள்ள பாக்டீரியாக்களால் விரும்பப்படுகின்றன. மேலும் அவை விரைவாக நொதிக்கத் தொடங்குகின்றன. இதனால் அதிக அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயுவுக்கு வழிவகுக்கிறது.
advertisement
advertisement
advertisement
குளிர்பானங்கள் : சிலர் சாப்பிட்ட பிறகு, வாயுவை விடுவிக்கும் என்று நினைத்து சோடா அல்லது குளிர்பானங்களை குடிப்பார்கள். ஆனால் உண்மையில், குளிர்பானங்களில் ஏற்கனவே நிறைய வாயு உள்ளது. இது வயிற்றில் வாயுவின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து இப்போதே கைவிடுங்கள். சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை ஒருபோதும் குடிக்க வேண்டாம்.








