அரிசியை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா..?
- Reported by:Prathap
- Published by:pradeepa m
Last Updated:
அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
advertisement
மேலும் அரிசியை ஊறவைப்பதன் ஊட்டச்சத்துக்கள் மூலம், தண்ணீரில் அதன் நன்றாக உறிஞ்சப்படுகின்றன. தவிர அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அளவிலும் தாக்கம் ஏற்படுகிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் எவ்வளவு விரைவாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன என்பதை GI லெவல் வெளிப்படுத்துகிறது. அரிசியை சமைக்கும் முன்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதால் நொதி முறிவு (enzymatic breakdown) .
advertisement
இது நிகழ்வதன் மூலம் அரிசியில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக நமது உடல் இந்த சத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்கின்றன. இது அரிசியின் GI லெவலை குறைக்கிறது. ஒரு உணவின் GI லெவல் குறைவாக இருக்கும்போது, அதனை எடுத்துக்கொள்ளும் நபரின் ரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
advertisement
தற்போதெல்லாம் அரிசியை ஒருமுறை கழுவி மைக்ரோவேவ் செய்து, குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தினால் பஞ்சு போன்ற சாதம் தயார்தான். நம்முடைய அம்மாக்களும், பாட்டிக்களும் அரிசியை 'கணிசமான நேரம் ஊறவைத்து சமைத்து பரிமாறியதை ஒப்பிடும்போது, நவீன கால சமையல்முறை போதுமான சத்தை நமக்கு அளிக்கிறதா மற்றும் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விகளுக்கு மத்தியில் சமைப்பதற்கு முன் அரிசியை ஊறவைப்பது ஏன் மிகவும் முக்கியமானது என்பதை இங்கே பார்க்கலாம்.
advertisement
அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயைபோக்கு வல்லதாக அமைகிறது. இருப்பினும் ஒரு சிலர் அரிசியை சுமார் 3 முதல் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பார்கள். ஆனால் இப்படி செய்வதன் மூலம் அரிசியிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தண்ணீரில் கரைந்து விடுகின்றன. இதனால் அரிசியில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். அரிசியை அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம், இதனால் நம் உடலுக்கு பல நன்மைகள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். அதேபோல தண்ணீரில் நன்கு கழுவி சமைக்கலாம். இதனால், செரிமான அமைப்பை சரியாக வைத்திருக்கும்.
advertisement
advertisement
advertisement









