குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்... பகவதி அம்மன் கோவில் தரிசன நேரம் அதிகரிப்பு...
- Reported by:Raghul Chandran
- Published by:Muthu Kathan
Last Updated:
கன்னியாகுமரி வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
advertisement
advertisement
ஒரு சிலர் அருகில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் சென்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சென்றும் மாலை அணிந்து தங்கள் விரதத்தை இன்று முதல் துவங்கினர். கன்னியாகுமரியில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகர விளக்கு காலம் வரையிலும் அதாவது ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை, ஐயப்ப பக்தர்களின் சீசன் காணப்படுவதால் வடமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கன்னியாகுமரி வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
advertisement
இதன் காரணமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், பகவதி அம்மன் கோவில், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு குழாய் செல்லும் பகுதி, கடற்கரைச் சாலை என அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் பாதுகாப்பு பணியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
advertisement





