தென் மாநிலங்களின் சீரிய பங்களிப்பு இல்லாமல் நாட்டின் ஒன்றுபட்ட முன்னேற்றம் சாத்தியமில்லை. மோடி அரசு அனைத்து மொழிகளையும் சமமாக கருதுகிறது. இன்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுகின்றனர். அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு சமமாக கருதுகிறது என்பதை இதன் மூலம் நாம் மகிழ்ச்சியுடன் உணர்கிறோம்.
மத்திய அரசு இதுவரை 111 கோடி கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது இதில் இருந்து இந்தியா மீண்டு வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கொரோனாவில் இருந்து நாடு இன்று வேகமாக மீண்டெழுந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு உள்ளது.
advertisement
அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி இயக்கத்தை மேலும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற மண்டல குழுக்கள் உண்மையிலேயே அறிவுரை வழங்கும் குழுக்கள் மட்டுமே ஆகும். ஆனால் இது போன்ற குழுக்கள் கூட்டத்தால் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் கடந்த 7 ஆண்டுகளில் 18 முறை மண்டல குழுக்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு முழு காரணம் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வழங்கும் முழு ஒத்துழைப்பு ஆகும் என்று தெரிவித்தார்.
