புதிய டயர் மாற்றும் செலவை கணிசமாக குறைப்பதால், லாரி, பஸ் போன்ற வணிக வாகன உரிமையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொழில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் தரக்கூடியது.
இந்த நிலையில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக டயர் ரீட்ரேட்டிங் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களான ரப்பர் பெல்ட், சொல்யூஷன், பாண்டிங் கம் என ஒவ்வொரு நாளும் விலை உயர்வதால் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
advertisement
இதையும் படிங்க: தங்கக் கடன்களுக்கு நாளை முதல் புதிய விதிகள்... RBI கொடுத்த முக்கிய அறிவிப்புகள்...
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுச்சேரி
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- ராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- திருச்சி
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
ரீட்ரேட்டிங்கிற்கு தேவையான மூலப்பொருட்கள் விலை, மின்சார கட்டணம், கூலி, இதனை சரிக்கட்ட ஒரு டயர் ரீட்ரேட்டிங் செய்ய ரூ.5,500 இருந்த நிலையில் ரூ.1500 ஐ கூடுதலாக உயர்த்தி உள்ளதால் லாரி, பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து டயர் ரீட்ரேட்டிங் சிறு, குறு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி கூறுகையில், "மறைமுகமாகவும், நேரடியாகவும் பல ஆயிரம் பேர் இந்த ரீட்ரேட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரீட்ரேட்டிங் தொழில் என்பது மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் தொழிலை செய்து வருகின்றோம்.
தற்போது வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக மூலப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால் எந்த மாதிரியான விலையை நிர்ணயம் செய்யலாம் என தெரியாமல் தவித்து வருகின்றோம். மேலும் ரப்பர் விலையும் மீண்டும் உயரும். இதனால் லாரி உரிமையாளர்கள் ரீட்ரேட்டிங்கிற்கு வருவார்களா என அச்சமாக உள்ளது.
இதையும் படிங்க: School Leave: பள்ளிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை... மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...
மத்திய அரசு ரீட்ரேட்டிங் தொழிலுக்கு உண்டான மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு நலிவடைந்து வரும் ரீட்ரேட்டிங் தொழிலுக்கு விசைத்தறிக்கு மானியத்தில் மின்சாரம் வழங்குவது போல் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க





