யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்காது..?
அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 02, 2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு
மட்டுமே பெற முடியும்
5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC
PHH - Priority Household
PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana)
NPHH -Non Priority Household
NPHH-S- NPHH- Sugar
NPHH-NC - NPHH- No Commodity
இதில், PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும். இந்த கார்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
NPHH-S- NPHH என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். NPHH-NC - NPHH ஆகிய ரேஷன் அட்டைதார்களுக்கு எந்த பொருளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் மேலே குறிப்பிட்டுள்ள
3 வகையான PHH, PHH-AAY, NPHH அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்னும் பார்க்க
இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?