பிரபல நடிகர்களின் படங்களை இந்த மதுரை சந்தையில் தான் ஷூட்  பண்ணாங்களா.?

மதுரை என்றாலே மதுரை மல்லி, மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் இவைதான் ஃபேமஸ் என்று நினைப்பீர்கள். ஆனால், மதுரையில் ஷூட்டிங் ஸ்பாட்டும் பேமஸானது.

மதுரையில் எக்கச்சக்கமான படங்களை ஷூட் பண்ணி இருக்காங்க. அப்படி பேமஸான சூட்டிங் ஸ்பாட்களில் ஒன்றுதான் மதுரை உலக தமிழ்ச் சங்கம் ரோடு பக்கத்தில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தை.

இந்த சந்தையில் முழுக்க முழுக்க இரும்பு சாமான்கள் தான் இருக்கும். இது போக சின்ன சின்ன பானை கடை, மரக்கடை, மூலிகை கடைகளும் இருக்கும். 

இந்த இடத்தில் தான் விஜய் சேதுபதி போலீஸாக நடித்த 'சேதுபதி' படத்தோட ஃபைட் சீன் சூட்டிங் நடைபெற்றது.

அந்த சீனில் போலீஸ் எல்லோரும் சேர்ந்து திருடர்களை பிடிக்கிற மாதிரியான ஒரு சண்டை காட்சி இந்த பிளேஸ்ல தான் எடுத்திருப்பாங்க. திருடனை பிடித்து தாறுமாறாக அடிக்கிற சீனும், 

திருடனா அடிக்கும் போது கூட இருக்கிற ஒரு போலீஸையும் தெரியாம அடிக்கும் பொது ‘சார் நான் மட்டில இருக்கேன், திருடன் வந்தால் பிடிக்கிறேன் நீங்க போங்க சார்’ என்று விஜய் சேதுபதியிடம் இன்னொரு போலீஸ் சொல்ற சீனும் இந்த பகுதியில்தான் ஷூ
பண்ணிருப்பாங்க.

இதேபோல, ஒரு கிரில் கேட்ல மாட்டிக்கிட்ட திருடன விஜய் சேதுபதியும் இன்னொரு போலீஸ் அதிகாரியும் அடிக்கிற மாதிரியான ஃபைட் சீன் முழுவதும் இந்த இடங்களில்தான்
எடுக்கப்பட்டன.

ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற ‘டிங் டாங்’ சாங்ல இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை பிளேஸ்ல பாபி சிம்ஹா ஒருவரை இரும்புனால அடிக்கிற மாதிரியான சீனையும் இங்கு தான் எடுத்து இருப்பாங்க.

சுப்பிரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்யும், சசிகுமாரும்  பேசிக் கொண்டுவர மாதிரியான ஒரு குட்டி சீனையும் இந்த சண்டே மார்க்கெட்டில் தான் ஷூட்பண்ணி இருப்பாங்க. இதேபோல, பல சீன்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

தேனியில் 5 தலை நாகம் பாதுகாத்து வரும் சிவன் கோயில்.!