நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
இஞ்சியை நன்கு இடித்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் துளசியையும் நன்கு இடித்து அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். சாறு பிழிய காட்டன் துணியை பயன்படுத்தி பிழிந்தால் சாறு நன்கு வரும்.
பின் இரண்டு சாறையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். அதில் தேன் கலந்துகொள்ளுங்கள். இப்போது அப்படியே அதை குடித்துவிடுங்கள்.
இதை ஒரு வயது முடிந்த குழந்தை முதல் கொடுக்கத் தொடங்கலாம். அவர்களுக்கு அரை ஸ்பூன் வீதம் தரலாம். 3-5 வயது குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் கொடுக்கலாம். 5-8 வயது குழந்தைகளுக்கு 2 ஸ்பூன் தரலாம். 8-12 வயதுக்கு 3 ஸ்பூன் தரலாம்.
டீன் ஏஜ் பிள்ளைகள் முதல் நடுத்தர வயது கொண்டவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். தினமும் 2 வேளை குடிக்கலாம்.
உங்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள், சிகிச்சை எடுத்து வருகிறீர்கள், மாத்திரை உட்கொள்கிறீர்கள் எனில் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிக்கலாம்.