முகப்பு /விருதுநகர் /

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை.. விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை.. 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை.. விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை.. 

X
மாதிரி

மாதிரி படம்

Weather News : வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வெயிலை மட்டுமே பிரதான காலநிலையாக கொண்ட விருதுநகரில் பெய்த மழையின் காரணமாக வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. முன்னதாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், காலை மதியம் மற்றும் மாலை என 3 வேளைகளிலும் மழையானது விட்டு விட்டு பெய்து வரும் காரணத்தால் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. ஏற்கனவே மழைக்காலம் முடிந்து வெயிலும் குளிரும் நிலவி வரும் நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் குறைந்து இதமான காலநிலை நிலவி வருகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar, Weather News in Tamil