பராமரிப்பு பணிகள் காரணமாக விருதுநகர் மார்க்கமாக செல்லும் செங்கோட்டை பயணிகள் ரயில் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் ரத்து தொடர்பாக தென்னக இரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், ’வருகின்ற டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மதுரை ரயில்வே கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 11.30 க்கு மதுரையில் இருந்து விருதுநகர், ஶ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் இரயில் வண்டி எண்: 06663 மற்றும் 11.50 க்கு செங்கோட்டையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணிகள் இரயில் வண்டி எண்: 06664 ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்த ரயில்களில் பயணிக்க திட்டமிட்டுள்ளோர் மாற்று பயணத்திட்டங்களை ஏற்பாடு செய்து கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar