விருதுநகரில் நேற்று (21.12.22) அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், நிகழ்வில் முன்னதாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் காவல்துறை செயல்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கினார்.
இதனைத்தொடர்ந்து சாத்தூரில் உள்ள ஆசிரியான அன்னலட்சுமியின் செயினை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அறுத்து சென்ற நிலையில், தாயில்பட்டியில் ரோந்து பணியில் இருந்த காவலர் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று இருவரையும் பிடித்து செயினை மீட்டார்.
இதையும் படிங்க : மார்கழி அமாவாசையில் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
இந்நிலையில், காவலர் சதீஷின் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar