ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி தராததால் 3 பேர் கடத்திய விவகாரத்தில் 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர்அலி. இவரது நண்பரான கண்ணபிரான் என்பவருக்கு மும்பையைச் சேர்ந்த அபூர்கனி என்பவரிடமிருந்து ரூ.10 லட்சம் ரூபாய் கடன் பெற்று தந்ததாக கூறப்படுகிறது. கண்ணபிரானிடம் கொடுத்த பணத்தை ஜாபர் அலி மூலம் பலமுறை அபூர்கனி கேட்டதற்கு முறையான பதில் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜாபர் அலி, கண்ணபிரான், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அந்த சமயத்தில் ஜாபர் அலி உறவினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் மூன்று பேரையும் கடத்தி வைத்துள்ளதாகவும் ரூ.10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அலைபேசி எண்களின் சிக்னல் மூலம் அவர்கள் கொடைக்கானலில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற கூமாபட்டி காவல் துறையினர் கடத்தப்பட்ட மூன்று பேரையும் மீட்டனர். மேலும் மும்பையைச் சேர்ந்த அபூர்கனி, திருமங்கலத்தைச் சேர்ந்த நிரஞ்சன், திருமலை குமார், பாபு, அருள் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: M.செந்தில்குமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Virudhunagar