முகப்பு /விருதுநகர் /

வீட்டில் இருந்தே ஆபரணங்கள் தயாரிப்பு- விருதுநகரில் தடைகளைக் கடந்து சாதிக்கும் இல்லத்தரசி

வீட்டில் இருந்தே ஆபரணங்கள் தயாரிப்பு- விருதுநகரில் தடைகளைக் கடந்து சாதிக்கும் இல்லத்தரசி

X
இல்லத்

இல்லத் தரசி

Virudhunagar | விருதுநகரில் வீட்டிலிருந்தே ஆபரணங்கள் தயாரித்து தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார் இல்லத்தரசி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

வீட்டை விட்டுவெளியில் வந்து பெண்கள் பலர் சாதித்து வந்தாலும் இன்றும் பல பெண்கள் திறமைகள்இருந்தும் வீட்டில் முடங்கியிருக்கும் நிலை உள்ளது. அப்படி இருக்கையில் சாதிக்க களம் ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் வீட்டில் இருந்தே ஆபரணங்கள் தயாரித்து அசத்தி வருகிறார் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சுந்தரி. இல்லத்தரசியான இவர் கைவினைப்பொருளாக வீட்டில் இருந்தபடியே ஆபரணங்கள் தயாரித்து தற்போது தொழில்முனைவோராகவும் வளர்ந்து வருகிறார். தற்போது அரசு கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்து ஆபரணங்களை விற்பனை செய்து வரும் இவர் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறார்.

இதுகுறித்துபேசிய சுந்தரி, ’கல்லூரி படிக்கும் போதே தனக்கு தேவையான ஆபரணங்களை தானே செய்து பயன்படுத்தி வந்ததாகவும், கல்லூரியை முடித்து விட்டு சிறிது காலம் வெளியில் வேலைக்கு சென்ற போது ஆபரணங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

இல்லத்தரசி

பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் வேலைக்கு செல்ல முடியாமல் போனது என்றும் அப்போது தான் அரசு நிறுவனமான RSETI மூலம் கிராமபுற பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி தருவதாக தெரிந்து கொண்டு அதில் சேர்ந்து, ஆபரணங்கள் தயாரிப்பு மட்டும் அல்லாமல் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று பல விஷயங்கள் தெரிந்து கொண்டு பின்னர் லோன் பெற்று தற்போது சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

வளையல்

இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதன் மூலம் கண்டிப்பாக இன்னும் நான்கு பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரூ.300 முதல் Customised காதலர் தின பரிசுகள்.. தேனியில் இப்படி ஒரு கடையா?

அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் மற்றும் ஆபரணங்கள் வாங்க விரும்புவோர் 95975 70034 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Local News, Virudhunagar