முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

Virudhunagar district | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (22-02-2023) மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

முடங்கியார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான, தாலுகா அலுவலகம், பச்சமடம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, திரவுபதி அம்மன் கோவில் தெரு, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்மந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைகிறதா புதுச்சேரி? - வியக்கவைக்கும் சிறப்புகள்!

இதேபோல, ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar