விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21-02-2023) மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் தடை பகுதிகள்:
அருப்புக்கோட்டை மின்வாரியத்திற்கு உட்பட்ட தமிழ்பாடி துணைமின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் இடங்களான தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், மல்லி, மானகசேரி, மல்லிபுதூர், வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சார், நடுவபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar