விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி ரோடு பகுதிகளில் நாளை (18-02-2023) மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் தடை பகுதிகள்:
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதைவட மின் கேபிள் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் நிலையில் இப்பகுதியில் விருதுநகர் நகராட்சியின் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.
Must Read : கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!
எனவே, நாளை ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, இளங்கோவன் தெரு, வருமானவரி துறை அலுவலகம், ரோசல் பட்டி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar