முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

விருதுநகர் மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Virudhunagar district | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மற்றம் விருதுநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (14-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

விருதுநகர் ராமமூர்த்தி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, படேல் ரோடு, ஏ.ஏ. ரோடு, பேராலிரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்திமரத் தெரு, எல்.ஐ.ஜி. காலனி, ரோசல்பட்டி, சாஸ்திரி நகர், கஸ்தூரி பாய் சாலை, ரயில்வே பீடர் ரோடு, காசு கடை பஜார், காந்திபுரம் தெரு, மெயின் பஜாரில் வடபகுதி, மணி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது.

Must Read : புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான இந்த சீன் நம்ம தென்காசியில் தான் எடுக்கப்பட்டது - எங்கு தெரியுமா?

இதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்குண்டு, மேல துலுக்கன்குளம், கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூர், நாகம்பட்டி, வழுக்கலொட்டி, வரலொட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar