முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

மின் தடை

மின் தடை

Virudhunagar district | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (07-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், முத்துலிங்கபுரம், தொட்டியபட்டி, அழகாபுரி, கலங்காபேரி புதூர், ராஜீவ் காந்திநகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில் மற்றும் விஷ்ணு நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், இந்திரா நகர், குட்டதட்டி, செண்பகத்தோப்பு, மம்சாபுரம், காந்தி நகர், நரையன்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி மற்றும் ராஜபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என்று, மின் கோட்டசெயற் பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar