முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மக்களே உஷார்.... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மக்களே உஷார்.... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Virudhunagar district | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (04-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜீனியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

மின் தடை பகுதிகள்:

சூலக்கரை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கூரைக்குண்டு, கே.செவல்பட்டி, தாதம்பட்டி, மாத்தி நாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை மற்றும் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar