விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி மற்றும், மின்செயற்பொறியாளர் சின்னத்துரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின்தடை பகுதிகள்:
எரிச்சநத்தம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், நடையநேரி, குமிழங்குளம், கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரிஉசிலம்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, ஜமீன் சல்வார்பட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, கொண்டையம்பட்டி, முருகனேரி, அக்கனாபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க
அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வலையப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வலையப்பட்டி, கிருஷ்ணன் கோவில், மங்கலம், புதுப்பட்டி, அழகாபுரி, மூவரை வென்றான்மற்றும் பிள்ளையார் நத்தம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar