விருதுநகர் மாவட்டம் சிவகாசி மின் கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக நாளை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (15.06.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.