விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த சில வாரங்களாக கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை கண்காணித்து வந்த கடத்தல் தடுப்பு பிரிவினர் தற்போது ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க 1800 500 5950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar