வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறும். அந்த வகையில் வைகுண்ட ஏகாதேசி தினமான இன்று விருதுநகரில் உள்ள பிரசித்திபெற்ற ஶ்ரீரங்கநாதர் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.
ஜனவரி 2ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு அதிகாலை 5 மணியில் நடைபெற இருந்த நிலையில், பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கோவில் வளாகத்தில் குவிய தொடங்கிவிட்டனர். சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தர சொர்க்க வாசலின் மறுபுறம் வந்து நின்றனர்.
இதையும் படிங்க : கலெக்டர் அலுவலகத்தில் உலா வரும் நாய்கள்... விருதுநகரில் பொதுமக்கள் அச்சம்..
பின்னர் 5 மணியளவில் சொர்க்க வாசலானது யானை மூலம் திறக்கப்பட, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று நாமம் பாடி சுவாமியை வழிபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சொர்க்க வாசல் திறக்கப்பட்ட பின்னர் அலங்காரத்துடன் பெருமாள் வாசலில் நின்று காட்சி தர பக்தர்களும் நீண்ட நெடிய வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் உள்ள ராமர் கோயிலிலும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar