பொதுவாக அனுமன் ஜெயந்தியானது அனுமனை நினைவுகூற இந்து சமய மக்களால் கொண்டாப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த பண்டிகை மார்கழியில் வரும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் கூடி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவவது வழக்கம்.ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று (23.12.22) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விருதுநகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நகரில் உள்ள அனுமன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் விருதுநகர் அல்லம்பட்டி தரைப்பாலம் பகுதியில் உள்ள கட்டையபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு முதலிய சாற்றி வழிபடுவது வழக்கம் என்பதால் அருகில் இருக்கும் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றியும், துளசி மாலை, வெற்றிலை மாலை முதலியன சாற்றியும் வழிபட்டு சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar