முகப்பு /விருதுநகர் /

ஏப்ரல் மாத அமாவாசை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!

ஏப்ரல் மாத அமாவாசை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Virudhunagar news | இன்று முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பெளவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சித்திரை 17-ம் தேதியான இன்று மாத பிரதோஷம், மற்றும் வருகின்ற புதன் கிழமை 19-ம் தேதி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும்10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களும் மலையேற அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பிரதோஷம் மற்றும் பெளர்ணமி நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Sathuragiri, Virudhunagar