மழையின் காரணமாக விதிக்கப்பட்ட இரண்டு நாட்கள் தடையின் காரணமாக சதுரகிரி மலையில் பக்தர்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இம்மலையில் உள்ள மகாலிங்கம் கோவிலுக்கு பல ஊர்களை சேர்ந்த பக்தர்கள்வந்து மலையேறி சிவனை வழிபட்டு செல்கின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கு வனப்பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அனுமதிக்கப்பட்ட நாட்களிலும் மழைப்பொழிவு இருப்பின் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்படுவது வழக்கம்
இந்த நிலையில் தை பௌர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் 7 வரை பக்தர்கள் மலையேறலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் இரண்டு நாட்கள் மலையேற அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதற்கென வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து பக்தர்கள் பிப்ரவரி 5ம் தேதி மலையேற அனுமதிக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் விதிக்கப்பட்ட தடையால் காலை முதலே பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar