விருதுநகர் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விருதுநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பங்குனி திருவிழா:
விருதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு பங்குனி மாதம் கொண்டாடப்படும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் புகழ் பெற்றது.
இத்திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல் , கயிறு குத்துதல் , தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துவர். விருதுநகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா என்பதாலே ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பங்குனி பொங்கலுக்காக எதிர்பார்த்து காத்திருப்பர்.
இதையும் படிங்க: மண்ணில் புதைந்த நகரம் தனுஷ்கோடி.. புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து இன்று 58-வது ஆண்டு
இந்த நிலையில் இந்தாண்டு பங்குனி திருவிழாவிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் விருதுநகர் மக்கள் குஷியாகி உள்ளனர்.இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி 12.03.2023 அன்று கோவிலில் திருவிழாவிற்கான பொங்கல் சாட்டுதல் நிகழ்வு நடைபெறும்.
அதை தொடர்ந்து 26.03.2023 அன்று கொடியேற்றமும், 2.04.2023 அன்று திருவிழாவும் 03.04.2023 அன்று அக்னி சட்டி எடுத்தல் நிகழ்வும், 04.04.2023 அன்று தேரோட்டம் நடைபெறும்.
அதை தொடர்ந்து 05.04.2023 , 06.04.2023தேதிகளில் தேர் தடம் பார்த்தல் நிகழ்வும் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இறுதியாக 9.04.2023 தேதியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mookuthi Amman, Tamil News, Virudhunagar