விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் கோவிந்தா சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் கோவிந்தா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மறுகட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து செல்வ விநாயகர் திருக்கோவிலுக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் மேப்..
கோபுர கலசங்களுக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன கணபதி ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது.
கோபுரங்களுக்கு கீழே நின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற உள்ளூர் வெளியூர் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன் விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.