விருதுநகரை சேர்ந்த ஏஎன்டி அறக்கட்டளையினர் பொங்கலை முன்னிட்டு விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் கொண்டாடினர்.
விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஏஎன்டி மருத்துவம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை விருதுநகரில் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொங்கலை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒய்ஸ்மென் விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளோடு பொங்கல் கொண்டாட முடிவு செய்த ஏஎன்டி அமைப்பினர் பொங்கலுக்கு முந்தைய நாள் மாலையில் விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதனை அடுத்து பொங்கலன்று விருதுநகர் புல்லலக்கோட்டையில் உள்ள நியு லைஃப் ஹோம்மில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய விருந்து ஏஎன்டி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
விருதுநகரில் மாணவர்களுக்கு ஒருநாள் விவசாயப் பயிற்சி- மக்கள் பாதை அமைப்பின் அசத்தல் முயற்சி
செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar