முகப்பு /விருதுநகர் /

இடிந்து விழும் நிலையில் 40 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்தேக்க தொட்டி.. அலறும் விருதுநகர் மக்கள்..

இடிந்து விழும் நிலையில் 40 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்தேக்க தொட்டி.. அலறும் விருதுநகர் மக்கள்..

X
நீர்நிலைத்

நீர்நிலைத் தேக்கத் தொட்டி

Viruthunagar News | விருதுநகர் அல்லம்பட்டி பகுதியிலுள்ள 40 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டி இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து, இடியும் தருவாயில் இருப்பதால் அதை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில், காமராஜர் சிலை அருகே அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி ஒன்று கடந்த 1976 ம் ஆண்டு கட்டப்பட்டது. நாற்பது ஆண்டுகளை கடந்து இன்றும் இந்த தொட்டி மூலமாக அல்லம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த தொட்டியில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சுக்கள் கீழே பெயர்ந்து விழுவதாக கூறப்படுகிறது.

மேலும் குடிநீர் தொட்டியின் தூண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து விரிசல்களுடன் காணப்படுவதால், குடிநீர் தொட்டியானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற சூழல் காணப்படுகிறது. இதனால் இதனை சுற்றியுள்ள வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

40 ஆண்டுகளை கடந்து இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள சேதமடைந்த இந்த தொட்டியை பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar