முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்

Vallalar Devotees : விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் வள்ளலார் அருள் மாளிகை அமைந்துள்ளது. வரலாறு போற்றும் வகையிலும் அவர் சொன்ன வழியிலும் அவருடைய சிஷ்யர்கள் பல உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.

அதுபோல் திருஅருட்பிரகாச வள்ளலார் துவக்கி அருளிய அணையா அடுப்பு என்னும் சத்திய தருமசாலையின் 157வது ஆண்டையொட்டி அருள் மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக்கட்டளை அன்பர்கள் நடத்தும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் ஆதரவற்றவர்கள் கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் என ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் வேஷ்டி, புடவை வழங்கப்பட்டது.

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்

மேலும் ஆயிரம் நபர்களுக்கு 5 கிலோ அரிசி, 3 கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்பும் , இன்னும் ஆயிரம் நபர்களுக்கு வேஷ்டி, புடவையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பெரும் விழாவிற்கு விழுப்புரம் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். மேலும் இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Villupuram