விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார்.

மாணவர்கள் வரைந்த ஓவியம்..
தூய இருதய மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, மரங்களை வளர்க்க வேண்டும், குப்பைகளை கொட்ட கூடாது, நெகிழி பைகளை பயன்படுத்தக்கூடாது, மழை நீரை சேகரிக்க வேண்டும், வெப்பமயமாதல், தொழிற்சாலைகள் அதிகரித்தல் போன்ற தலைப்பின்கீழ் மாணவர்கள் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தனர்.

மாணவர்கள் வரைந்த ஓவியம்..
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
“என் நகரம் - என் பெருமை” என்ற நிலையை பொதுமக்கள் உருவாக்கும் வகையில், தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்திடவும், தூய்மையினை பாதுகாக்க உறுதுணையாக இருந்திட வேண்டுமெனவும் ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார்.

மாணவர்கள் வரைந்த ஓவியம்..
மேலும் இந்த விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைந்ததை பற்றி மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பள்ளியில் தான் இது போன்ற விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து இருக்கிறோம் ஆனால் முதன்முதலாக பொது இடத்தில் பேருந்து நிலையத்தில் வரைவது எங்களுக்கு நல்ல அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் பல்வேறு தலைப்பின் கீழ் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சுவர் ஓவியங்களை வெற்றிகரமாக வரைந்துள்ளோம்.
பொதுமக்கள் இதனை பார்த்து செல்வது மட்டுமல்லாமல் இந்த ஓவியம் வரைந்து இருக்கும் தகவல்களைப் வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என மாணவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.