விழுப்புரம் நகர பகுதியான பாரதிநகரில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துவருவதாகவும், தார்சாலை அமைக்கப்படவில்லை, பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் நகரப் பகுதியான திருநகர் பகுதியில் அமைந்துள்ள பாரதியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாகவும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் மழைகாலங்களில் வாகனங்களில் செல்லும் போது முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கீழே விழுந்து பாதிப்படைவதாகவும், நகராட்சி சார்பில் நீர்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து, தூசிகள், பூச்சிகள் அதிகம் வருதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தோண்டப்பட்ட நிலையில் சாலை
பயன்படுத்த முடியாத அளவிற்கு வரக்கூடிய குடிநீர் குறித்து பல முறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதாள சாக்கடைத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தார்சாலை இல்லாத பகுதி
சாலையோர மின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை எனவும் பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் உள்ளதால் கழிவு நீர் சாலையோரம் தேங்கி தொற்று ஏற்படுவதாகவும், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் எங்க பகுதி நகராட்சி கவுன்சிலர் தங்களுடைய பகுதிக்கு வரவில்லை எனவும் வாக்கு கேட்டு வந்ததாகவும், மக்கள் பிரச்சனையை கேட்க வருவதில்லை என அப்பகுதி மக்கப் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.