விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நகராட்சி திடலில் 12 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கர்ணன் படத்தில் வரும் "கண்டா வர சொல்லுங்க" பாடலை எந்த ஒரு பின்னணி இசையும் இல்லாமல் சிறப்பாக பாடல் பாடி அசித்துள்ளார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை புத்தகத் திருவிழா நடைபெறாத நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமல்லாது மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், தலைவர் போட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகத் திருவிழா கலைநிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த ஹர்ஷினி நேத்ரா என்ற மாணவி கண்டா வர சொல்லுங்க என்ற பாடலை எந்த ஒரு பின்னணி இசையும் இல்லாமல் மிக அற்புதமாக பாடியுள்ளார்.
ஹர்ஷினி பாட ஆரம்பித்தவுடன் அரங்கமே அமைதியில் மூழ்கியது. அனைவருமே ஹர்ஷினி நேத்ராவின் பாடலை ரசித்து கேட்க ஆரம்பித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram