முகப்பு /செய்தி /விழுப்புரம் / விஷசாராயத்தால் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்.. விழிபிதுங்கும் குடும்பங்கள்... சோகத்தில் மீனவக் கிராமம்..!

விஷசாராயத்தால் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்.. விழிபிதுங்கும் குடும்பங்கள்... சோகத்தில் மீனவக் கிராமம்..!

பரிதவிக்கும் குடும்ப உறுப்பினர்கள்

பரிதவிக்கும் குடும்ப உறுப்பினர்கள்

Viluppuram illict liquor death | விழுப்புரத்தில் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் மக்களின் மரண ஓலங்கள் கண்கலங்கச் செய்கின்றன. 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷச்சாராயத்தால் 14 பேர் உயிரிழந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலும் சோகம் நிலவிவருகிறது. பல குடும்பங்களும் தாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.

எக்கியார்குப்பம் மீனவக் கிராமத்தில் மரண ஓலங்கள் கேட்டு வருகின்றன. விஷச் சாராயத்தால் இந்த கிராமத்தில் 14 உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தையை இழந்து ஒரு குடும்பமே நிற்கதியாக நிற்கிறது. தனது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் தனக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை என்கிறார் கீதா.

வேல்முருகன் என்பவர், தனது குடும்பத்தில் 6 பேர் இறந்துவிட்டதாகவும், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும், சுனாமி தாக்கியபோதும் எந்தப் பலியும் ஏற்படாத இந்த கிராமம், தற்போது சோகமே உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் அவர்களது உறவினர் காத்தாயி.

இதேபோன்று, குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் மக்களின் மரண ஓலங்கள் கண்கலங்கச் செய்கின்றன. இந்த மீனவக் கிராமத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு குடும்பமும் கடலில் போய் இறங்கி காலை முதல் இரவு வரை பணியாற்றும் ஆண்களை நம்பியே இருந்தன. தற்போது, வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

செய்தியாளர்: ரகுவரன்

top videos
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13