இந்தியாவின் 75 சுதந்திர தின விழாவையொட்டி செஞ்சிக்கோட்டையை வரும் 15ம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக பாா்வையிடலாம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது.
விழுப்புரத்திற்கே அடையாளமாக விளங்கும் செஞ்சிக் கோட்டை. இதை பார்க்க ஏராளமான வெளிநாடு, வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இன்று வரை செஞ்சிக்கோட்டையின் கட்டட அமைப்பும் அதன் உருவாக்கமும் காண்போரையும் வரலாற்று ஆசியர்களையும் ஒரு நிமிடம் திக்கு முக்காட வைக்கிறது. மேலும், உலகின் முக்கிய அடையாள சின்னமாகவும் விளங்குகிறது இந்த கோட்டை.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி , நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை பொதுமக்கள் கட்டணமின்றி பாா்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செஞ்சிக்கோட்டையைப் பாா்வையிட வியாழக்கிழமை ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்தது.
சுதந்திர தின விழாவையொட்டி, செஞ்சிக்கோட்டையின் மதில் சுவா் 150 மீட்டா் நீளத்துக்கு தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.