விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்து கீழக்கொந்தை கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவருக்கு வயது 66. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
ராமச்சந்திரன் அப்பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து, தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை அப்பகுதியில் மேச்சலுக்காக அழைத்துச் சென்று விட்டு பின் வழக்கம் போல, மாலை
6 மணி அளவில் ஆடுகளை கொட்டாயில் அடைத்துவிட்டு இரவு தூங்கியுள்ளார்.

ஆடுகள் இறப்பு
பின்பு காலை எழுந்து ஆட்டுக்கொட்டாயை சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் எட்டு ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் விவசாயி ராமசந்திரன். மர்ம விலங்கு கடித்து எட்டு ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக, ராமச்சந்திரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வட்டாச்சியர் இளவரசன், கால்நடை பராமரிப்பு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிர் இழந்த ஆடுகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் ஆடுகளை கடித்த சம்பவம் குறித்து விவசாயி கூறுகையில் "இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆடுகளை கடித்தது மர்ம விலங்கு அல்லது நாயா என தெரியவில்லை என விவசாயி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கிராமத்தில் திடீரென மர்ம விலங்கு கடித்து எட்டு ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.