விழுப்புரத்தில் வீட்டை அபகரித்துக்கொண்டு தாய், தந்தையை பெற்ற மகனே வெளியேற்றியதால், வயதான தம்பதி ஒரு வாரமாக வீதியிலேயே பொருட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வானூர் வட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்துவின் முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், முதல் மனைவிக்கு இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு 3 பேருக்கும் தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதிவைத்தார் இதில், மாரிமுத்து, தனது மனைவியுடன் வசித்த வந்த வீட்டை இளைய மகன் வெங்கடேஷ் சேர்த்து எழுதிக் கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பின்னர் அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு வயதான பெற்றோரை வெளியேற்றிவிட்டு வீட்டை அபகரித்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், பெற்றோரை இளைய மகன் வெங்கடேஷ் அவருடைய வீட்டில் வைத்து பராமரிக்க அண்மையில் திண்டிவனம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அத்துடன், மூத்த மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தவும் அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவை அடுத்து, கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துகொண்டு, மாரிமுத்து தனது மனைவியுடன் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர். ஆனால், அவர் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்றவிட்டார். இதனால், கடந்த ஒரு வாரமாக வயதான தம்பதி பொருட்களுடன் வீட்டு வாசலியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.