விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்றிய நகராட்சி ஊழியர்கள்.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் மழை பெய்த நிலையில் தற்போது, காலை முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் நகராட்சி உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் , விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பள்ளி வளாகம் சரியான முறையில் இருக்கிறதா பள்ளி வளாக கட்டிடங்கள் ஸ்திரத்தன்மையோடு தான் இருக்கிறதா என பள்ளி ஆசிரியர்கள் பார்வையிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் .
இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு உள்ளே பார்வையிட வந்த போது, மழை நீர் தேங்கி இருந்ததை கண்டனர். தேங்கியுள்ள நீரில் டெங்கு காய்ச்சலை வரவைக்கும் ஈடீஸ் போன்ற கொசுக்கள் உற்பத்தியாகும் என பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் இந்த கொசுக்கள் கடித்தால் குழந்தைகளுக்கு நிச்சயம் பாதிப்பு வரும் என்பதால் அதை உடனே வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த மழைநீரும் உடனடியாக அகற்றப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Villupuram