முகப்பு /விழுப்புரம் /

தோட்டக்கலைத்துறையின் மானிய உதவியுடன் சுரைக்காய் சாகுபடியில் செம லாபம் பார்க்கும் விழுப்புரம் விவசாயி!..

தோட்டக்கலைத்துறையின் மானிய உதவியுடன் சுரைக்காய் சாகுபடியில் செம லாபம் பார்க்கும் விழுப்புரம் விவசாயி!..

X
சுரைக்காய்

சுரைக்காய் சாகுபடி

Villupuram District News | விழுப்புரத்தில் தோட்டக்கலைத்துறையின் மானிய உதவியுடன் சுரைக்காய் சாகுபடியில் விவசாயி ஒருவர் அதிக லாபம் பார்த்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டாரத் திற்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஏழுமலை (45) இரண்டரை ஏக்கர் இடத்தில், கோயம்புத்தூர் ஹைபிரிட் - 1 ரக சுரைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகை சுரைக்காய் நல்ல லாபம் தரக்கூடிய பயிர் ஆகும். சரியான பராமரிப்பும், நீர் வளமும் இருந்தால் சுரைக்காயில் நல்ல வருமானம் பார்க்கலாம். அதுவும் ஆடி மாதத்தில் அதிக மகசூல் தரக்கூடிய பயிராகும்.

இதுகுறித்து பேசிய விவசாயி  ஏழுமலை, கோயம்புத்தூர் ஹைபிரிட் -1 (Coimbatore hybrid -1) சுரைக்காய் நான்கு மாத காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிராகும். தகுந்த இடைவெளியில் குழிகள் தோண்டி, குழிக்கு மூன்று என்ற அளவில் விதை விதைக்க வேண்டும். முளைப்பு வந்த பிறகு, ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டுவிட்டு, மற்ற நாற்றுகளை அகற்றிவிடவேண்டும். முளைப்பு வந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும். களையை கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும்.

மேலும் விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் மகசூல் பெறலாம். குறைந்தபட்சம் 20 முதல் 25 பறி அறுவடை செய்யலாம். ஒரு பறிக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் சுரைக்காய் அறுவடை செய்ய முடியும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20கிலோ வரை சுரையை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு காயும் சராசரியாக ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடையுடன் இருக்க வேண்டும். தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிச்சயமாக நான்கு மாதத்தில் நான்கு லட்சம் முதல் 5 லட்சம் வரை வரை இதில் நல்ல வருமானம் பார்க்க முடியும் என்று விவசாயி ஏழுமலை கூறினார்.

மேலும் பந்தலுக்கு உள் பகுதியில் 10 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளை கட்டுப்படுத்தலாம். குளவிகள் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக்கொண்டு அவை இறந்துவிடும். இதனை செய்தால் பூச்சித்தொல்லை இல்லாமல் சுரையை பாதுகாக்க முடியும் என்றும் விளக்கமாக தெரிவித்தார் விவசாயி ஏழுமலை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்துடன், தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர கல்தூண் பந்தல் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு ஏக்கருக்கு சுரைக்காய் விவசாயம் செய்தால் , தோட்டக்கலைத் துறை மூலம்ரூ. 20,000  மானியத்தில் ரூ.15,000 ஆயிரத்திற்கு சுரைக்காய் நாற்றுகள், மற்றும் ரூ.5,000 -த்திற்கு இடுபொருட்கள் வழங்கப்படுகிறன. எனவே வெங்கந்தூர் கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் பந்தல் காய்கறிகளில் புடங்காய்,பீர்க்கங்காய் மற்றும் சுரைக்காய் போன்ற காய்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

First published:

Tags: Local News, Villupuram