விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வானூர் தாலுகா புதுக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சியில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை, ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர்.
அந்த மனுவில், புதுக்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்யும் பெண் தொழிலாளர்களை ஒருமையில் பேசுகின்றனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் வைக்காமலேயே கிராம மக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். தீர்மானம் எழுதாமலேயே அதற்கான இடம்விட்டு மக்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு பிறகு பொய்யான தீர்மானத்தை எழுதிக்கொண்டு அதனை நிறைவேற்றுகின்றனர்.
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊர் பொதுமக்கள் ஆட்சியரிடம் கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இம்மனுவை பெற்ற ஆட்சியர் மோகன், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
செய்தியாளர் : பூஜா (விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram