விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13 ஆம் தேதி மாலை விஷச் சாராயம் அருந்தி, 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டதை அடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் போலீசார், சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள், மெத்தனால் விற்பனை செய்தவர்கள் என 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Villupuram