விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும், அது குறித்த விவரங்ளையும் கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்கும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணக்கையில் இடம் பெற்றுள்ளதை கண்டறிவதற்கும், தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவுகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : நாமக்கல்லில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
இந்த சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6 பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் தவறாமல் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram