அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர்ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவட்டார போக்குவரத்து அதிகாரி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
விழுப்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.
வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது,ஏர்ஹாரன்களை அகற்ற பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில் விபத்து ஏற்படுத்தாமலும் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் வாகனங்களை இயக்குதல் வேண்டும், சீருடை அணிந்து வாகனங்களை இயக்குதல் வேண்டும், அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் கூடாது, பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
மேலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர்ஹாரன்களை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும்.
ஏர்ஹாரன்களை எடுக்காமல் இருந்தால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமில்லாமல் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் போக்குவரத்து அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
எனவே வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதித்த விதிமுறைகளை பின்பற்றிய வாகனங்களை இயக்கும் 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.