விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தேவையான பூஜை பொருட்கள், அலங்கார பொருட்கள், மண்பானைகள், கரும்பு என அனைத்துப் பொருட்களையும் வாங்குவதற்கு மார்க்கெட் வீதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் விழுப்புர நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
அந்தவகையில், விழுப்புரம் எம்.ஜி.ரோடு மார்க்கெட்டில் அலங்கார பொருட்கள், மண்பானைகள்,கரும்பு, மஞ்சள் கொத்து என அனைத்தும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக விழுப்புரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். அது மட்டுமல்லாமல் தைப் பொங்கலை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் மாடுகளுக்கான அலங்கார கயிறுகள் பத்து ரூபாயில் ஆரம்பித்து 500 ரூபாய் விலை வரை விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும் மூக்கு கயிறு, கொம்பு கயிறு, சங்கு கயிறு, வெண்டையம், மணி, சலங்கை போன்ற பல அலங்காரப் பொருட்கள் விற்கப்பட்டன. இப்பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மார்க்கெட் வீதி முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Villupuram